Wednesday, July 14, 2010

முதல் மனைவி,முதல் கார் - பாகம் 1

நான் குமார். மென் பொருள் துறையில் பணி புரியும் இருபது லட்சம் பேரில் ஒருவன். என்னுடைய புதிய கார் பற்றியும் அதன் இன்ன பிற இடர் பாடுகள் பற்றியும், ஒரு நீண்ட நெடுந்தொடரகவே எழுதி விடலாம், இருந்தாலும் நமீதாவின் உடை கொள்கையைப் போல் சுருக்கமாக, ஒவ்வொன்றாக சொல்ல முயற்சிக்கிறேன்.




" கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு,ஒரு கார் உண்டா,இன்னும் அந்த ஓட்டை பைக்கில் எவள்ளவு நாள் போறது ? "

" ம்"

"ஒங்களோட வேலை பார்க்குற எல்லாரும் வாங்கல?? "

" ம்ம்"

"எது கேட்டாலும், அதனால் என்ன! உடனே வாங்கிடலாம் செல்லம்னு ஒரு பீத்தல் வேற "

" ம்ம்"

"ஒங்களுக்கு மட்டும் ஏன் இது எல்லாம் தோன மாட்டேன்குது"

" வும்ம்"

"என்ன காதுல உழுவுதா"

" வும்ம்"

"நானும் கத்தி கத்தி தொண்டை தண்ணிதான் வத்திப் போச்சு.ஒன்னும் ஒரைக்க மாட்டேன்குது" ..


காவிரில தண்ணி வத்தி போனதுக்கே கவலை இல்லாமல், அரசாங்கம் தரப் போகும் அடுத்த இலவசம் என்ன என்று குவாட்டர் போட்டு குப்புற கவிழ்ந்து யோசிக்கும் தமிழன் இதுக்கெல்லாம் கவலைப் படுவானா என்ன! என்று ஒரேயடியாக புறம் தள்ள முயற்சித்தாலும்,

நானும் எவ்வுளவு நாள் தான் சார்,இந்த "பொல்லாதவன்" படத்துல தனுஷ், சந்தானத்தை கழிப்பறை வாயிலில் மடக்கி,பிரச்சனையின் வீரியம் புரியாமல், தன் காதலியை பற்றி சிலாகித்து சொல்வாரே...

அதுக்கல்லாம் "வும்ம்" "வும்ம்" என்று அடக்கவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் சந்தானம் பம்முவாரே!! அதைப் போல சொல்லி சமாளிக்க முயற்சிப்பது ??

" சரி நாளைக்கு புக் பண்ணிடலாம்" என்று வீராப்பாக சொல்லி விட்டு வேகமாக கழிப்பறை கதவை திறந்து உள்ளே நுழைந்தேன்.

-தொடரும்

No comments:

Post a Comment